• India,  LTTE,  Tamil Nadu

    ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?

    இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா. உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள். தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?

  • India,  Tamil Eelam

    தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?

    என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா? அட பின்ன என்னங்க? தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது? என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க].  சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள்.  எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ? ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது. மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார்.  தனக்கு புலிகள் அந்தக்…

  • India,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

    த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா. முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும். எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து. வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.…

  • LTTE,  Tamil Eelam

    த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

    இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து. என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே]. த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து. என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள். இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம். எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின். த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

  • LTTE,  Tamil Eelam,  Tamils

    மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

    மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம். நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை. வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார். இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள்…

  • India,  Tamil Nadu

    [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்

    எத‌ற்கும் த‌யாராக‌ த‌மிழ் நாட்டிற்கு கிள‌ம்பிவிட்டேன். சென்னை விமான‌ நில‌ய‌த்தில் இறங்கிய‌து ந‌ம‌து Jet Airways. விமான‌த்திற்கு வெளியில் வ‌ந்து அந்த‌ ந‌டை ஓடையினுள் ந‌ட‌க்கும் போதே சாடையான‌ வெட்கை தொட‌த் தொட‌ங்கிய‌து. அம்மாவிற்கு wheelchair book ப‌ண்ணி இருந்த‌னாங்க‌ள். விமான‌த்தின் க‌த‌விற்கு வெளியே நின்றிருந்தார்க‌ள். wheelchair ஐப் பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருந்த‌து. அட‌ அம்மா அதிலிருந்து த‌வ‌றி விழுந்து விடுவாரோ என்று தான். கை வைப்ப‌த‌ற்கு இரு ம‌ருங்கிலும் ஒரு த‌டைக‌ளும் கிடையாது. ஒரு ப‌க்க‌ம் ச‌ரிஞ்சால், அப்ப‌டியே வ‌ழுக்கி விழ‌ வேண்டிய‌து தான். ஏதோ ஏறிக்கொண்டு போனோம். wheel chair இற்கு என்று த‌னியான‌ custom counter. எந்த‌ பிர‌ச்சினையும் இல்லாம‌ல், மிக‌ குறுகிய‌ நேர‌த்திலேயே bag எடுக்கும் இட‌த்திற்கு வ‌ந்து விட்டோம். ஏதோ போற‌ணைக்குள் இருப்ப‌து போல் ஒரு சாடையான‌ உண‌ர்வு. என‌து ம‌னைவிக்கு விய‌ர்க்க‌த் தொட‌ங்கி விட்ட‌து. என‌க்கு இன்ன‌மும் விய‌ர்க்க‌வில்லை. என் உட‌ம்பு வெட்கையை, குளிரை விட‌ விரும்புவது, என்ப‌தாலோ என‌க்கு விய‌ர்க்க‌வில்லை. ஆனால், என‌க்குள் ஏதோ ஒரு…

  • India,  Tamil Nadu

    [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 2] இந்தியா போகும்போது எடுத்துச்செல்ல‌ வேண்டிய‌வை

    ஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு. இந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் செய்வ‌மே. அவ‌ருக்கு fees $85. அவ‌ர் சொன்ன‌து இவை தான். த‌ண்ணீர் போத்த‌லை வாங்கிக் குடி. ந‌ன்றாக‌க் காய்ச்சாத‌ எதையும் சாப்பிடாதே. அப்ப‌வே யோசித்தேன், அப்ப‌டியாயின் “கையேந்தி ப‌வ‌னில்” சாப்பிட‌லாம். அது ந‌ல்லா ச‌மைச்ச‌து தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க‌, ந‌ண்டு, றால், ம‌ட்டி இப்ப‌டி. என‌க்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட‌ இத‌ல்லாம் சாப்பிட‌க்கூடாதா. ஆ, டாக்ட‌ர் கிட‌ந்தார், ம‌ன‌துக்குள் யோசிச்சுக் கொண்டேன். க‌ன‌டாவில் ந‌ல்ல‌ உண‌வின்றி நா வ‌ற‌ண்டு போய்க் கிட‌க்குது. த‌மிழ் நாடு போய் எங்க‌ள் ஊரில் போல் எல்லாம் இருக்கும்…

  • India,  Tamil Nadu

    [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 1]: க‌ன‌டாவில் இந்திய‌ விசா விண்ண‌ப்பிப்போர்க்காக‌

    இந்திய‌ இராணுவ‌த்துட‌னான‌ என‌து அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் க‌ச‌ப்பான‌வையாக‌ இருந்த‌ன‌. இத‌னாலேயே நான் இந்திய‌ அர‌சாங்க‌த்தை மிக‌வும் எதிர்ப்ப‌வ‌னாக‌ இருக்கிறேன். அத‌ற்காக‌ இந்தியாவே போக‌மாட்டேன் என்று பிடிவாத‌ம் பிடிக்க‌வில்லை. என‌து திரும‌ண‌ம் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவிற்கு நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் அங்கு ஒரு reception வைக்க‌ப்ப‌டும் என்று முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பா, அப்ப‌ம்மா ம‌ற்றும் சித்திமார்க‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கிறார்க‌ள். என‌க்கும் மிக‌வும் குதூக‌ல‌மாக‌ இருந்த‌து. அட‌ என‌க்கும் த‌மிழ் நாடு போற‌துக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று. க‌ன‌டா வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் இந்த‌ நாட்டை விட்டு வெளியில் போக‌வில்லை. அதுவும் “த‌மிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற‌ எண்ண‌ம் என்னை பூரிக்க‌ வைத்த‌து. என் த‌மிழ் உருவான‌ இட‌த்திற்கு, தாய்த் த‌மிழ் நாட்டிற்குப் போக‌ப் போகிறேன் என்ற‌ உண‌ர்வு. ச‌ரி ச‌ரி மேல‌ சொல்லுற‌ன். த‌மிழ் நாட்டுக்குப் போக‌வேண்டும் என்றால் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமே. என்ன‌ க‌ன‌டா சிட்டிச‌ன் என்றாலும் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமா? ஏன்? அது தான் இந்திய‌…

  • Tamil Nadu,  Tamils

    த‌ல‌ [அஜித்] இனி down தான்

    என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே. நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன். நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து. ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும்…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamils

    இந்தியாவின் உத‌வி

    ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன். த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌. த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும். என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும். இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை. ச‌மாதான‌…

© 2023 - All Right Reserved. | Adadaa logo