India,  LTTE,  War of Tamil Eelam

ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?

ஐயா அகிம்சை வழி பேசும் இந்தியனே, காந்தியைக் கொன்றபின்னே காந்தியின் அகிம்சை வழியையும் கொன்றுவிட்டீர்கள்.

பாகிஸ்தானுடன் போர், பங்களாதேஷுக்கு படை அனுப்பு உதவி, பஞ்சாப்பில் படுகொலைகள் இலங்கையில் படை அனுப்பி அட்டூழியம் எல்லாம் செய்துவிட்டு, நாங்கள் அகிம்சாவாதிகள் எங்களைப் போல் பின்பற்றுங்கள் என்று பேதை போல் பிதற்றாதீர்கள். ஏன் இப்போது கூட பாகிஸ்தான் படையை பின்வாங்கினால் தான் நாங்களும் படையைப் பின் வங்குமோம் என்று அடம் பிடிக்கிறீர்கள். கார்கிலில் பல உயிர்கள் இழப்பை அகிம்சைவழியிலா இழந்தீர்கள்?

அகிம்சை வழியில் போகவேணும் என்று நினைத்திருந்தால் ஏன் இந்தியா அணுகுண்டு தயாரித்தது? ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தும் அணு குண்டை செய்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செய்தவர்கள் தானா அகிம்சாவாதிகள்?

நாங்கள் தமிழன் என்பதால் எங்களுக்கு வேறு நீதியோ? இருக்கலாம் தமிழன் பாவப்பட்ட ஜென்மம் தானே.

நான் புலிகள் செய்வது முற்றுமுழுதக சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியா ஒன்றுமே செய்யவில்லை, புலிகள் தான் முதுகில் குற்றிவிட்டார்கள் என்று சொல்வதைத் தான் பிழை என்கிறேன்.

அகிம்சைவழி சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தியாகிகளுக்கு இன்னும் ஒழுங்காக அரசங்க உதவிகள் போய்ச் சேரவில்லையாம். முதலில் அதைப் போய்க் கவனியுங்கள். பாவம் கிழவன் மண்டையைப் போடக்குமுதலாவது நிம்மதியைக் குடுங்கோப்பா. [நாங்களும் செய்திகள் வாசிக்கிறனாங்கள்.]

<< பாகம் – 03

_____
CAPital

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo