War of Tamil Eelam
-
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது. அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது. இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது? புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.
-
வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!
ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை. ஆண்டவனைப் பிரார்த்திப்போம். எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. ஒருவர் சரியான சாமி பக்தனாம். அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம். அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம். ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம். அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம். சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம். மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார். இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை…
-
“What can I do?”
“What can I do?” – Sharing my thoughts with the Tamil Diaspora The plight of our people has been steadily reaching newer levels. And, after being an observer with a hands-off approach, I decided to do something about it. I became proactive – in small ways. As a mother of two young children living in Ottawa, Canada and having many commitments, it was not easy to change my inaction – but I did. I firmly believe now, that if we all do our little part and started working towards a common vision, that vision will and must materialize. I realise there’s spiritual element to this as well, and of…
-
Eelam and Indian Security
Part I: Eelam and Indian Security: Averting a Catastrophe “What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.” http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786 ============================================================ Part II: Eelam and Indian Security: Need for policy alternatives “It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion…
-
Intervention in Sri Lanka: The IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd.); Manohar; pages 108, Rs. 545
Depinder Singh writes: “… I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in…
-
வித்தாகிப்போன 19,539 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது. 27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு…
-
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்!
இன்று திலீபன் நினைவு நாள். கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் களவாக ஆரேஞ் ஜூஸ் குடிப்பது போல் இல்லாமல், உண்மையிலேயே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உயிரை மாய்த்துக்கொண்ட நெஞ்சழுத்தக் காரன். குளிக்கும் போது கூட வாயிற்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொண்டவன். ஒரு முறை தான் இருந்தான், மறுமுறை இருந்து விடுவானோ என்று பயத்தில், அனுப்பி விட்டார்கள். காந்தி எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது (அ) சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் சந்தித்து வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. அது வெள்ளைக்காரன். ஒரு முறை கூட, இவரை விட்டால் மீண்டும் மீண்டும் இருப்பார் என்று, சாக விடவில்லை. காந்தியை சாக விடக்கூடாது என்று தான் கட்டளையாகவே இருந்ததாம். அகிம்சையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காந்தி பிறந்த தேசம், அகிம்சாவாதிகள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள், அகிம்சையாக இருந்த திலீபனுடன் வந்து கதைக்கக் கூட இல்லை. உயிர் பிரிந்த பின், வருத்தப்படுகிறோம், கவலைப்படுகிறோம்; அறிக்கைகள். என்ன இருந்தாலும், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். ______…
-
தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? – 03
எனது ஒரு பார்வை பதிவை தடை செய்ததன் காரணத்தை இறுதியாக சொல்லி விட்டார்கள் தேன்கூடு தள ஆளுநர்கள். முப்பது நாட்கள் கடந்த பின் தான் எனக்கே தெரிகிறது என்ன காரணம் என்று. யாரோ நான் துவேசத்தை ஊட்டுகிறேன் என்று கோள்மூட்டி இருக்கிறார்கள். உடனே அவர்கள் என் பதிவை வந்து பார்வையிடாமல், எனக்கும் அறிவிக்காமல் தடை செய்து விட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தேன்கூடு தள ஆளுநர்களுக்கு [சிலருக்கோ (அ) பலருக்கோ] தமிழ் தெரியாத காரணத்தால் தானாம் இவ்வளவு தாமதமாக காரணத்தை எனக்கு சொன்னார்களாம். அது என்னமோ இருக்கட்டும்.இப்போது எனது புதிய பதிவான ஒரு பத்திரம் என்னும் தளத்தை அவர்கள் பட்டியலில் சேர்க்கும்படி கேட்டிருந்தேன். பல நாட்களின் பின் நானாகவே கண்டறிந்தேன் அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை. அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்று கேட்டதற்கு இந்த பதிவு ஆங்கிலத்தில் எழுதுவீர்களா (அ) தமிழில் எழுதுவீர்களா என்று கேட்டு விட்டிருந்தார்கள். அப்படி ஆங்கிலத்தில் எழுதவதாக இருந்தால் பதிவை வெறும் பட்டியலில் சேர்க்கலாம், [இடுகைகள் புதிப்பக்கப்படாது] என்று சொல்லி இருந்தார்கள். இந்த மடலுக்கும்,…
-
தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? – 02
முதலில் எனது பதிவில் உள்ள இடுகைக்கு [தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்?] வருகைதந்து நூலகம் குழுமத்திற்கு இணைப்பு தந்து உதவிய “nameless” அவர்களுக்கும், விண்ணாணம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இங்கே எழதப்படும் பதில்கள் யாவும் தேன்கூடு தள ஆளுநர்களுக்காக என்று நான் சொல்லவில்லை. இதை பொதுவாகவே எழுதுகிறேன். ஏனெனில், அவர்கள் எனக்கு இப்படியான மடல்கள், நூலகம் கூகிள் குழுமத்தில் இடப்பட்டுள்ளது போல், எதையும் அனுப்பியது கிடையாது. ஆதலால் அவர்களுக்கு என்று என்னால் பதில் போட இயலாமலுள்ளது. இதுவரைக்கும், தேன்கூடு தள ஆளுநர்கள் எனக்கு எந்த வித காரணமும் சொல்லவில்லை. அவர்கள் அனுப்பிய அத்தனை மடல்களும் எனது மேற்குறிப்பிடப்பட்ட இடுகையில் பதிவி செய்துள்ளேன். 24 மணி நேரத்திற்கும் என் பதிவை இணைத்தவர்கள் [தடைசெய்யப்பட்டது என்று நான் அறிந்து] 29 நாட்கள் (இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்) ஆகியும் எந்த வித காரணமும் இதுவரைக்கும் சொல்லவில்லை. என் இடுகையில் நான் சொன்னதுபோல், இப்படியான தளங்கள் இருக்கு என்று தெரிந்த பின் நான் பதிவைத் தொடங்கவில்லை. ஆதலால், இவர்கள் இணைக்காவிட்டாலும்,…
-
புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு
பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் [1]. தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான் கணக்கிலெடுக்கப்படும் [4]. இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் அரசு உதவி வழங்கும். இதற்கு இந்தியா வாக்குறுதி கொடுக்கும். புலிப் படையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்க இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும். இறந்த மாவீரர்களின் கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்காமல், [இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடன் செய்தது போல்], அவற்றை மதிக்கும் என இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்களை காவல்துறையிலும், இராணுவத்திலும் பாரபட்சமின்றி சேர்க்கும். தமிழர்களின் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை புதிதாக நிறுவி, மேலும் சிங்களவர்களை அங்கு அரச உதவியுடன் குடியேற்றமாட்டார்கள் என இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும் [2]. தமிழர்களின்…