India,  Politics

இந்தியாவில் புரட்சி?! – 02

முத்தமிழ் குழுமத்தின் இழையில்,  ஒப்பாரி வைக்காதீர்கள் கம்யூனிஸ்டுகளே, நடக்கும் கருத்து விவாதத்திற்கு என் கருத்து
சரி, எனக்கு கம்யூனிசமோ சோசலிசமோ சனநாயகமோ இந்தியாவிற்கு நல்லது என்று தெரியாது. ஆனால், இன்று இந்தியா மிக மிக ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது. இதை சரிக்கட்ட ஏதாவது தடாலடியாக செய்தாக வேண்டும். அது தான் என் விருப்பம். அதற்காக கம்யூனிசத்திற்கு மாறினால் ஊழல் நின்று போய் விடும் என்று சொல்ல முடியுமா?

ஆகவே, ஊழல் செய்யாமல் இருக்குமுகமாக ஒரு சிறந்த கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் காவல் சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் ஒழிய வேண்டும்.

இன்றய சூழலில், இந்திய இளைஞர்களுக்கு வேலை தேவை. அது தான் முக்கிய பிரச்சினை. பல்கலைக்கழக பட்டதாரி ஆட்டோ ஓட்டிகொண்டிருக்கிறான். அதை வெளிநாட்டு நிறுவனங்கள் நிவர்த்தி செய்கிறதென்றால் அதை அரசு அனுமதிப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா அப்படி அனுமதிக்காவிட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாட்டுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து விடுவார்கள். இதனால் இந்தியாவை விட மற்றய நாடு வேகமாக வளர்ச்சி அடையும். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஆனால், இப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தாலும் உள்நாட்டு நிறுவனங்களை அரசு பாதுக்காக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனக்களுக்கு அதிக வரி வசூலித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி செய்து ஈடு கட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் புதிய நிறுவனங்கள் தோன்ற அரசு வழிசமைக்க வேண்டும். ஏன்? என்றைக்கு இந்தியாவில் நிறுவனம் வைத்திருப்பதால் இலாபம் ஈட்ட முடியாமல் போகிறதோ அன்றைக்கு அத்தனை வெளிநாட்டு நிறுவனங்களும் மூட்டை கட்டிவிடும். அப்போது இந்தியா ஒரு பெரும் பொருளாதரச் சிக்கலுக்குள் தள்ளப்படும். இந்தியா மீண்டும் பிச்சக்கார நாடாக போனாலும் போகலாம். இரண்டாம் உலகப் போரில் ஆயுத தளபாடங்கள் உற்பத்தி செய்து இலாபம் ஈட்டிய நாடுகள், போர் முடிந்த பின் ஒரு பெரும் பொருளாதார சிக்கலுக்குள் மாட்டிகொண்டது போல். கனடாவில் கூட பாண் வேண்டுவதற்கே கஷ்டப்பட்டார்களாம். இதை மனதில் நிறுத்தி வரும் இலாபத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் வளரவும், மற்றய துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசு உழைக்க வேண்டும். இப்படி இந்திய அரசு செய்கிறதா?

சீனாவில் உற்பத்தி செய்தால் செலவு குறைவு என்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலேயே உற்பத்தி செய்கிறார்கள். சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அவர்கள் சில உதிரிப் பாகங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் தான் பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்பட்டுகிறது. ஆனால் சீன அரசு, இவர்களின் இந்த உதிரிப் பாக இறக்குமதிக்கு தனியாக ஒரு வரி அறவிடுகிறது. சீன அரசு சும்மா கண்ணை மூடிக்கொண்டு செயற்படவில்லை. அவர்கள் மிகவும் உசாராகத் தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு கட்டமைப்பே சிறந்த நாடாக உயர்த்த வல்லது.

<< பாகம் – 01

_____
CAPital

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo