Sri Lanka

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam

    Intervention in Sri Lanka: The IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd.); Manohar; pages 108, Rs. 545

    Depinder Singh writes: “… I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in…

  • Sri Lanka,  Tamils

    காதலும் சுதந்திரமும்

    காதலும் சுதந்திர வேட்கையும் ஒன்று இப்பவருமோ எப்பவருமோ என்று ஏக்கம் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் குறை கூறுவார்கள். உள்ளே, வெளியில் நிற்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று ஒரு பயம். மற்றவர்களை பகைக்கலாமா (அ) பகைக்காமல் இருந்து எம் உணர்ச்சியை வெல்லவேண்டுமா என்று எப்போதுமே ஒரு சிந்தனை. எங்களின் உள்ளே தான் எதிரியும் ஒடுக்க ஒடுக்க இன்னும் மேலோங்கும்

  • India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    இந்தியாவின் நாடகம் அம்பலம்!

    இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் அதைப்பற்றி விபரிக்காமல் கீழே உள்ள ஒளிப்பதிவைப் பாருங்கள்: Download link இப்போது இதை வாசித்து விட்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள்: சிறுவன் கதைக்கும் போது அருகாமையில் உள்ளவர் என்ன செய்கிறார்? சிறுவன் “சிறிலங்கா நேவி” என்று சொன்னதும் அவர் முகத்தில் தோன்றும் மாற்றங்கள். அவர் சிறுவனைக்கு அது விடுதலைப்புலிகள் என்று சொல்லச் சொல்கிறார். ஒலிவடிவில் “அது விடு” என்று கேட்டவுடன் துண்டிக்கப்படுகிறது. நேற்று “விசு win ம‌க்க‌ள் அர‌ங்கம்” பார்த்தேன். அதில் அவ‌ர் இரு சிறுமிக‌ள் த‌ங்க‌ள் கிராம‌மான‌ “ம‌ன்னார் குடி” இல் இருக்கும் முக்கிய‌ பிர‌ச்சினைக‌ளை சொல்கிறார்க‌ள். விசு கேட்கிறார், ஏம்மா இவ்வ‌ள‌வு பெரிய‌ விச‌ய‌த்தைச் சொல்ல‌ உங்க‌ ஊரில் பெரிய‌வ‌ங்க‌ ஒருத்த‌ரும் இல்லையா என்று. அத‌ற்கு அந்த‌ச் சிறுமிக‌ள் கூறுவார்க‌ள் “பெரிய‌வ‌ங்க‌ளுக்கு feelings. அவ‌ங்க‌ளுக்கு ப‌ய‌ம். என‌க்கு ப‌ய‌மில்லை”. சில சந்தேகங்கள்: மீன்வர்கள் தமிழகக் கரை வந்தடைந்ததும் எந்த ஊடகவியளாளர்களுடனும் கதைக்க அனுமதிக்கப்பட‌வில்லை. மொத்தமாக 11 பேர் மீண்டு வ‌ந்தாலும்…

  • Government,  India,  Sri Lanka,  Tamil Eelam

    மே தினத்தில் நம் தொழிலாளிகள் போராடினார்களா?!

    யாரோ தொழிலாளிகளுக்காக மேலைத்தேய நாட்டில் போராடியதற்காக ஏன் நாமும் [இந்தியா, இலங்கை] கொண்டாடுகின்றோம்? சொந்தமாக சிந்திக்கும் மூளை அடிமைக் குணத்தை மிஞ்சவில்லையா? வெள்ளைக்காரன் தன் நாட்டின் மக்களின் பங்களிப்பை நினைவூட்ட நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுகிறான். நாமோ அவன் கொண்டாட்டத்தில் நம் நாட்டு தொழிலாளிகளின் பங்களிப்பைக் கணக்கிலெடுக்கவில்லை. நம் நாட்டுத் தொழிலாளிகளின் பங்களிப்பை நினைவுபடுத்துமுகமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தானே? அப்படி நம் நாட்டுத் தொழிலாளிகள் பங்களைக்கவில்லையா? வெள்ளைக்காரன் செய்தால் அப்படியே பின்னாலே போகும் அடிமைக் குணம் என்று தான் தீருமோ? பாருங்கள் ஒவ்வொரு வெள்ளைக்கார நாடுகளும் வெவ்வேறு நாட்களை தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறார்கள். சில நாடுகள் மே 1ம் திகதி அவர்களுடைய கலாச்சார பண்டிகை நாளாக ஏற்கனவே இருப்பதால் கொண்டாடுகிறார்கள். http://en.wikipedia.org/wiki/Labour_Day http://en.wikipedia.org/wiki/May_Day

  • Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    தமிழா நீ?

    எனக்கும் என் சகோதரனுக்கும் பிரச்சினை.  அடுபட்டுக்கொள்வோம்.  எனக்குத் தேவையான சொத்தை பிரித்துத் தா என்று பேசுவோம். பக்கத்து வீட்டுக்காரன் எனது சகோதரனை எங்கோ வீதியால் போகும்போது அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டான் என்றால் நானும் கசோதரனும் ஒன்று சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடுவோம். அயலூர்க் காரன் நம்ம ஊரில் நாட்டாமை செய்தால், பகைமையை தள்ளிப்போட்டு  ஒன்றுசேர்ந்து அவனை எதிர்ப்போம். சரி பக்கத்து மாகாணக் காரன் எம்மை அடிமைப்படுத்த முயல்கிறான் என்றால், அயலூர்க் காரனையும் ஒன்று சேர்த்து பக்கத்து மாகாணக் காரனுடன் சண்டை போடுவோம். பக்கத்து நாட்டுக்காரன் போர் தொடுக்கிறான் என்றால், எங்கள் மாகாணப் பிரச்சினையை தள்ளிப்போட்டு விட்டு ஒன்று சேர்வோம். பிரித்தானியா கிட்லருடன் போர் தொடுக்கும்போது இந்தியாவும் பிரித்தானியாவிற்குத் தானே உதவியது. அன்று பிரித்தானியா அடிமைப்படுத்துகிறவன், அவனை கிட்லர் அழிக்கட்டும் என்று சும்மா இருந்திருந்தால் கிட்லர் இந்தியாவைப் பிடித்திருப்பான். வேண்டாம், ஒரு வேறு கிரக மனிதர்கள் [alien] எமது பூமி மேல் போர் தொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்கன் காரன் சண்டை பிடிக்கட்டும், அவன் சர்வாதிகாரி,…

  • Government of Tamil Eelam,  India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    புலி ஆத‌ர‌வு ஏன்?

    ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன? ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும். இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம். இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது. பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது. 1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது. சிங்களம் மட்டும்…

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu

    பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்

    சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை. சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை. பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை. மதம் கேட்கப்பட்டது. மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது] ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்: வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள். குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில். குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை. பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை.…

© 2023 - All Right Reserved. | Adadaa logo