Home Movie Review வ‌ல்லவன்

வ‌ல்லவன்

by CAPitalZ

சரியான கூட்டம். வேட்டையாடு விளையாடுவிற்கு வந்த மாதிரி சனம்.

தொடக்கத்திலேயே “தலைவன்” என்று புகழ்ந்து தான் சிம்புவை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போதே விளங்கிவிட்டது இது மன்மதன் மாதிரி தற்புகழ்ச்சி இல்லாத படம் இல்லை என்று.

மன்மதன் தவிர்ந்த மற்றய படங்கள் மாதிரி இல்லாமல் வசனங்களை சற்றுக் குறைத்திருக்கிறார். ஆனாலும் வசனங்களும், ஸ்டைலும் அதிகம் தான். அவருக்கு குறைவு, நமக்கு அதிகமுங்க.

பாடல், இசை, ஒளியமைப்பு அற்புதம்! நகைச்சுவை இரசிக்கலாம்.

இருந்தாலும், தனுசைக் குறிவைத்தே முழுவதும் இருக்கிறது. வயது கூடிய பெண்ணை திருமணம் செய்வது, முதல் காதலி தன் காதலை புரிந்து கொள்ளவில்லை, அம்பானி பொண்ணை கலியாணம் கட்டி பெரியாள வர நீ ஆசைப்படுறாய் ஆனா நான் அம்பாணீயாவே வர ஆசைப்படுறன், காதல் தோல்வி என்றால் நான் காவல் நிலையம் கோர்ட் என்று போக மாட்டேன் [தனுசின் “தேவதையைக் கண்டேன்”], இப்படி போகுதுங்க.

இது ஏதோ, தனுசிடம் தோற்றுவிட்டேன் என்று கோபமாக அவரை வையிறது மாதிரி இருக்கிறது. தனுஸ் இதுவரைக்கும் சிம்புவிற்கு எதிராக எந்தப் படத்திலும் செய்தது இல்லை. அவர் அப்படி செய்யாமல் இருக்குமட்டும் சிம்பு தோற்றதாகவே உணருவார் என்பது என் எண்ணம்.

என்னமோ சிம்புவின் தற்புகழ்ச்சிக்கு படத்தில் குறைவேயில்லை. இதை ஆணவமாகத் தான் நான் பார்க்கிறேன்.

எனக்கோ இடைவேளை வரமுன்பே எப்போ படம் முடியும் என்றாகிவிட்டது.

இருந்தாலும், இளவட்டங்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. தனக்கென்றொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். அதனால், இனி சிம்பு தோற்பார் என்பது ஐயமே.

எனக்குப் பிடித்த கட்டம்:
சிம்புவிற்கும் நயந்தாராவிற்கும், திருமணமாக முன்பே உடலுறவு முடிந்து விடும். கமல் படங்களில் வருவது போல் ஒரு காட்சி. முடிந்த பின் நயந்தாரா அழுவார் “நான் தப்பு செய்துவிட்டேன்”. சிம்பு சொல்வார் “எல்லாப் பொண்ணுகளும் முடிஞ்சதுக்கப்புறம் இதைத் தான் சொல்லுறாங்க”. திரையரங்கில் விசில் கூரையைப் பிய்த்தது!

ஹுரே ஹுரே பாடலில் ஆங்கில பாடல் காட்சியமைப்பில் rap செய்வது போல் செய்திருக்கிறார். அதில் சிம்பு தமிழ் நடிகர்களில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார். இதனால், வெளிநாடுவாள் தமிழ் இளவட்டங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ரீமா சென் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் சற்று அகோரமாக எந்த மேக்கப்பும் இல்லாமல் அவரை பள்ளி மாணவியாக வலம்வர வைத்தது அசிங்கமாக இருக்கிறது.

ரீமா சென்னுக்கும் சிம்புவிற்கும் காதல் வெளிப்படும் காட்சியில் வசனமே பேசாமல் முகபாவனையில் சிம்பு நன்றாக செய்திருக்கிறார்.

கடைசி 30 நிமிடங்கள் இழுவை. படையப்பாவை re-make செய்திருக்கிறார்.

லாஜிக் பிழைக்கும் கட்டங்கள்:

நயந்தாரா வீட்டில் சிம்பு அறையில் இருக்கும்போது [உடலுறவுக்குப் பின்] நயந்தாராவின் பெற்றோர் வந்துவிடுவார்கள். பிறகு என்ன நடந்தது என்றே காட்டவில்லை.

ச‌ந்தியா க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வுட‌ன் சிம்பு அந்த‌ இட‌த்திற்கு அன்றிர‌வே போய்விடுவார். எப்ப‌டி தக‌வ‌ல் கிடைத்த‌து?

அள‌வுக‌ட‌ந்த‌ காத‌ல் வைத்துள்ள‌ சிம்பு ஒரு அடிமைபோல் இருக்கிறார். ம‌று விநாடியே புய‌லாக‌ மாறுகிறார். ச‌டாரென்று இப்ப‌டி மாற்ற‌ம் ஏற்ப‌டுமா?

இவ‌ற்றைப் பார்க்கையில், ம‌ன்ம‌த‌ன் ப‌ட‌த்தில் கோபித்துக்கொண்டு போன‌ இய‌க்குன‌ரின் ஆற்ற‌லால் தான் வெற்றி பெற்ற‌தோ என்று எண்ண‌த் தோன்றுகிற‌து.
_____
CAPital

Related Posts

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo