Tamil Nadu

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    Eelam and Indian Security

    Part I:  Eelam and Indian Security: Averting a Catastrophe “What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.” http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786 ============================================================ Part II:  Eelam and Indian Security: Need for policy alternatives “It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamil Nadu

    ரத்தினேஷின் கேள்விகளுக்கு என் பதில்கள்

    ரத்தினேஷ் அவர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்: ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும் உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திலாவது, சகோதர இயக்கங்களின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களா? இப்படி பல இயக்கங்கள் உள்ளபடியால் தான் இன்னும் பாலஸ்தீனத்தில் பிரச்சினை தீரவில்லை. சோமாலியாவிலும் தீரவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதப்படுகிறது: சமாதான பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்பதில்கூட ஒரு இணக்கப்பாடு காணப்படாமல் இருக்கிறது. ஒரு தரப்பிற்கு இப்படி ஒரு இணக்கப்பாடே காணமுடியாவிட்டால், எதிர்த்தரப்போடு சமதானப் பேச்சுவர்த்தையை மேற்கொண்டு செல்ல முடியாது. ஒரு இயக்கம் சமாதானம் என்றால், மற்றயது போர். ஒரு இயக்கம் 3 நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மற்றயது ஒன்றுக்குமே ஒப்புக்கொள்ள மாட்டுது. இந்த இழுபறி நிலை தமிழீழத்தில் வராமல் இருந்ததால் தான் நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாளாம் என்ற கதையாகி விடக்கூடாது. தலைமை என்கிற பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிலைமை வேறு விடுதலை இயக்கங்களில் இருந்திருக்கிறதா? ஒருவர் என்று இருந்தால் அதில் தப்பேதும்…

  • India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    இந்தியாவின் நாடகம் அம்பலம்!

    இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் அதைப்பற்றி விபரிக்காமல் கீழே உள்ள ஒளிப்பதிவைப் பாருங்கள்: Download link இப்போது இதை வாசித்து விட்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள்: சிறுவன் கதைக்கும் போது அருகாமையில் உள்ளவர் என்ன செய்கிறார்? சிறுவன் “சிறிலங்கா நேவி” என்று சொன்னதும் அவர் முகத்தில் தோன்றும் மாற்றங்கள். அவர் சிறுவனைக்கு அது விடுதலைப்புலிகள் என்று சொல்லச் சொல்கிறார். ஒலிவடிவில் “அது விடு” என்று கேட்டவுடன் துண்டிக்கப்படுகிறது. நேற்று “விசு win ம‌க்க‌ள் அர‌ங்கம்” பார்த்தேன். அதில் அவ‌ர் இரு சிறுமிக‌ள் த‌ங்க‌ள் கிராம‌மான‌ “ம‌ன்னார் குடி” இல் இருக்கும் முக்கிய‌ பிர‌ச்சினைக‌ளை சொல்கிறார்க‌ள். விசு கேட்கிறார், ஏம்மா இவ்வ‌ள‌வு பெரிய‌ விச‌ய‌த்தைச் சொல்ல‌ உங்க‌ ஊரில் பெரிய‌வ‌ங்க‌ ஒருத்த‌ரும் இல்லையா என்று. அத‌ற்கு அந்த‌ச் சிறுமிக‌ள் கூறுவார்க‌ள் “பெரிய‌வ‌ங்க‌ளுக்கு feelings. அவ‌ங்க‌ளுக்கு ப‌ய‌ம். என‌க்கு ப‌ய‌மில்லை”. சில சந்தேகங்கள்: மீன்வர்கள் தமிழகக் கரை வந்தடைந்ததும் எந்த ஊடகவியளாளர்களுடனும் கதைக்க அனுமதிக்கப்பட‌வில்லை. மொத்தமாக 11 பேர் மீண்டு வ‌ந்தாலும்…

  • Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    தமிழா நீ?

    எனக்கும் என் சகோதரனுக்கும் பிரச்சினை.  அடுபட்டுக்கொள்வோம்.  எனக்குத் தேவையான சொத்தை பிரித்துத் தா என்று பேசுவோம். பக்கத்து வீட்டுக்காரன் எனது சகோதரனை எங்கோ வீதியால் போகும்போது அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டான் என்றால் நானும் கசோதரனும் ஒன்று சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடுவோம். அயலூர்க் காரன் நம்ம ஊரில் நாட்டாமை செய்தால், பகைமையை தள்ளிப்போட்டு  ஒன்றுசேர்ந்து அவனை எதிர்ப்போம். சரி பக்கத்து மாகாணக் காரன் எம்மை அடிமைப்படுத்த முயல்கிறான் என்றால், அயலூர்க் காரனையும் ஒன்று சேர்த்து பக்கத்து மாகாணக் காரனுடன் சண்டை போடுவோம். பக்கத்து நாட்டுக்காரன் போர் தொடுக்கிறான் என்றால், எங்கள் மாகாணப் பிரச்சினையை தள்ளிப்போட்டு விட்டு ஒன்று சேர்வோம். பிரித்தானியா கிட்லருடன் போர் தொடுக்கும்போது இந்தியாவும் பிரித்தானியாவிற்குத் தானே உதவியது. அன்று பிரித்தானியா அடிமைப்படுத்துகிறவன், அவனை கிட்லர் அழிக்கட்டும் என்று சும்மா இருந்திருந்தால் கிட்லர் இந்தியாவைப் பிடித்திருப்பான். வேண்டாம், ஒரு வேறு கிரக மனிதர்கள் [alien] எமது பூமி மேல் போர் தொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்கன் காரன் சண்டை பிடிக்கட்டும், அவன் சர்வாதிகாரி,…

  • Government of Tamil Eelam,  India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    புலி ஆத‌ர‌வு ஏன்?

    ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன? ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும். இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம். இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது. பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது. 1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது. சிங்களம் மட்டும்…

  • Computer,  Tamil Nadu,  Thamizh

    தமிழில் நீங்கள் பேச கணினி தட்டச்சுவது சாத்தியமே!

    இந்த இடுகையானது மயூரன் அவர்களின் சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா? என்னும் இடுகைக்கான எனது பதில் இடுகை. நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம். “வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம். இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடன் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி. சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே? இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த‌” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை”…

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu

    பழைய தமிழீழமும் புதிய தமிழ் நாடும்

    சாதிப் பிரச்சினை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. சாதிச் சான்றிதழ், சாதிக் கழகம், சாதி வேட்பாளர் என்று இருக்கவில்லை. சாதி அடிப்படையில் வேலை, சாதி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அனுமதி என்று இருக்கவில்லை. பாடசாலை/ வேலை விண்ணப்பப் பத்திரத்தில் சாதி கேட்கப்படவில்லை. மதம் கேட்கப்பட்டது. மொழி அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு வளங்கப்பட்டது. [இதனால் தான் தமிழீழப் போரே உருவானது] ஆகலும் குறைந்த சாதிக்காரர்கள்: வீட்டு முற்றத்தோடு நிற்பாட்டி விடுவார்கள். வீட்டு விறாந்தைக்கு [கட்டிடத்திற்குள்] வர அனுமதிக்க மாட்டார்கள். குடிக்க, உண்ண என்று புரிம்பாக கோப்பை, கிண்ணம் வைத்திருந்தார்கள், முதலாளிகளின் வீட்டில். குறைந்த சாதிக்காரர் என்று எவரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கவில்லை. பிராமணர்களை எப்போதும் உயர்ந்த மனிதர்களாக பார்த்ததில்லை. அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் சாதி உயர்ந்த சாதி என்று எண்ணியதில்லை. பொது மக்களுக்கும் பிராமணர்களுக்கும் பெரிய இடைவெளி இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் வாழ என தனியாக ஒரு “அக்கிரகாரம்” இருந்ததில்லை. மற்றயவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்ததால், பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு என்று இருக்கவில்லை.…

  • India,  Tamil Nadu,  Tamil Unicode,  Thamizh

    தமிழ் ஒருங்குறி ?! – 16

    – ஒருங்குறியின் மேன்மை – பிற மொழிகள் இடம்பெற்ற முறை – தமிழ் மொழிக்கு உள்ள இடம் – தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல் – தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு – தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம் – தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள் – போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன். ஒருங்குறியும் தமிழும் மேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும். ______ CAPital பி.கு. :- பவர் பொய்ன்றில் தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் TSCu_Paranar.ttf எழுத்துருவை தரை இறக்கி நிறுவிப் பார்க்கவும். ஒருங்குறிக்கே இந்த நிலமையா! 🙁 TSCu_Paranar தரையிறக்கியவுடன் TSCu_Paranar.txt என்னும் கோப்பின் பெயரை TSCu_Paranar.ttf என்று மாற்றுக. பாகம் – 17 >> << பாகம் – 15

  • India,  LTTE,  Tamil Nadu,  War of Tamil Eelam

    புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு

    பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் [1]. தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான் கணக்கிலெடுக்கப்படும் [4]. இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் அரசு உதவி வழங்கும். இதற்கு இந்தியா வாக்குறுதி கொடுக்கும். புலிப் படையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்க இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும். இறந்த மாவீரர்களின் கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்காமல், [இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடன் செய்தது போல்], அவற்றை மதிக்கும் என இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்களை காவல்துறையிலும், இராணுவத்திலும் பாரபட்சமின்றி சேர்க்கும். தமிழர்களின் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை புதிதாக நிறுவி, மேலும் சிங்களவர்களை அங்கு அரச உதவியுடன் குடியேற்றமாட்டார்கள் என இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும் [2]. தமிழர்களின்…

  • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  War of Tamil Eelam

    வரலாறு மீண்டும் வரலாறாகுமா?

    இலங்கை அரசாங்கம் சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அடிகோலுகிறார்கள். இலங்கை அரசாங்கம் சிங்கள இராணுவ வீரர்களுக்கு வீரத்தைப் புகட்டுகிறது. புத்த பிக்குகள் கூட போர் தேவை என்கிறார்கள். சகல போர்களிலும் இலங்கை அரசாங்கமே வெற்றி, புலிகளை துரத்தி அடித்துவிட்டோம் என்று அறிக்கைகள். புலிகளுடனான போரில் நம்பமுடியாத அளவிற்கு புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு சாதகமான கருத்துக்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரிக்கின்றன. ஈழத்தமிழர் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத விற்பனையை குறைத்துள்ளது. பாகிஸ்தானுடனான, இலங்கை அரசாங்கத்தின் தொடர்பு அதிகரிக்கிறது. யாழ் குடாநாட்டுக்கான தரமார்க்க பாதை பல நாட்களாக மூடப்படுகிறது. 5,00,000 யாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரலாமென்னும் செய்தி அறிக்கைகள். மீண்டும் இந்திய இராணுவம் தமிழீழம் வருமா? புலிகள் இந்தியாவில் முக்கிய புள்ளியை கொல்வார்களா? அடுத்த ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை புலிகள் அறிவிப்பார்களா?   _____ CAPital

© 2023 - All Right Reserved. | Adadaa logo