Government of Tamil Eelam,  Tamil Eelam

தமிழீழ தேசிய கீதம் எழுதும் கவிஞர்களுக்கு/ இசையமைப்பாளர்களுக்கு

  • தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது.
    • இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.
  • தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய‌ வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது.
  • எந்த‌ ஊர்ப் பெய‌ரோ, மாகாண‌ப் பெய‌ரோ வராமல் இருப்பது நலம்.  தலைநகர் பெயரும் வராமல் இருப்பது நலம்.
    •  எதிர்காலத்தில் தலைநகர் பெயரை மாற்ற வேண்டி வந்தால் (அ) தலைநகரையே மாற்ற வேண்டி வந்தால், பிறகு தேசிய கீதத்தையும் மாற்ற வேண்டியிருக்கும்.
    •  திசைக‌ள் வ‌ர‌லாம்.
  • தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்க‌ளாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம்.
  • பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது.
    • இது தேசிய கீதம்.  போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது.
    • தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும்.
    • தமிழன் அரசு வளர போற்றுவதாக அமைதல் நலம்.
  • இசையமைக்கும்போது வேகமாக பாடி முடிப்பதாக‌ இருக்கக் கூடாது.
    • அமைதியாக தொடங்கி மெதுவாக வேகங் கூட்டி முடிவதாக‌ அமைதல் நலம்.
  • பாடல் இரண்டு [2] நிமிடம் தாண்டி பாடப்படுவதாக இருக்கக் கூடாது.
    • மிகவும் குறுகியதாகவும் இருக்கக் கூடாது.

_____
CAPital

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo